Saturday, September 29, 2012

Nee Paathi Naan Paathi Kanne Tamil Lyrics

பாடல்       :    நீ பாதி நான் பாதி கண்ணே,
படம்          :    கேளடி கண்மணி,
இசை        :     இளையராஜா,
பாடியவர்கள்  :   மனோ, உமா ரமணன்


M  :   நீ பாதி நான் பாதி கண்ணே 
F   :   அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே 
M  :   நீ பாதி நான் பாதி கண்ணே 
F   :   அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே 
M :    நீ இல்லையே அருகில் நானில்லையே துணை நீயே...ஏ எ எ ..
F  :   நீ பாதி நான் பாதி கண்ணே 
M :   அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே 


F   :    வானப்பறவை  வாழ  நினைத்தால்  வாசல் திறக்கும் வேடந்தாங்கல் 
M  :    கானப்பறவை  பாட  நினைத்தால் கையில் விழுந்த பருவப்பாடல் 
F   :    மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தம்       
          இருக்கும் உன்னாலே 
M  :    மெல்லச் சிறுக்கும் உன் முத்து நகை ரத்தினத்தை அள்ளித்  தெறிக்கும் 
F  :     மெய்யானது உயிர் மெய்யாகவே தடை ஏது .....
M :     நீ பாதி நான் பாதி கண்ணே 
F  :     அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே 
F  :     நீ பாதி நான் பாதி கண்ணா 
M :    அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே


M  :    இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே 
F   :    இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும்  தொடர்ந்து   
          வருவேன்  
M  :    சொர்க்கம் எதற்கு என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு 
          கண்ணே  வா ..
F :      இந்த மனம் தான் என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம் தான் 
          அன்பே வா
M  :    சுமையானது ஒரு சுகமானது சுவை நீ தான் ....


F   :   நீ பாதி நான் பாதி கண்ணா 
M  :  அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே 
M :    நீ இல்லையே அருகில் நானில்லையே துணை நீயே...ஏ எ எ ..
F  :    நீ பாதி நான் பாதி கண்ணே 
M :    அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே 


 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.