Thursday, September 20, 2012

Oru Jeevan Tamil Lyrics


பாடல்                  :      ஒரு ஜீவன்  ,
படம்                     :      கீதாஞ்சலி ,
இசை                    :      இளையராஜா ,
பாடியவர்கள்    :      இளையராஜா , சித்ரா.,
வருடம்               :      1985     

F :     ஒரு ஜீவன் அழைத்தது ..ஒரு ஜீவன் துடித்தது ..
          இனி எனக்காக அழ வேண்டாம் ..
          இங்கு கண்ணீரும் விழ வேண்டாம்..
          உன்னையே எண்ணியே வாழ்கிறேன்...
M :    ஒரு ஜீவன் அழைத்தது ..ஒரு ஜீவன் துடித்தது ..
          இனி எனக்காக அழ வேண்டாம் ..        F :   லல லல  லலலா 
M :    இங்கு கண்ணீரும் விழ வேண்டாம்.. F : லலல லா...
           உன்னையே எண்ணியே வாழ்கிறேன்..
F :      ஒரு ஜீவன் அழைத்தது ..ஒரு ஜீவன் துடித்தது ..
        

M :    முல்லை பூ போலே உள்ளம் வைத்தாய்
          முள்ளை  உள்ளே வைத்தாய் ...
F :      என்னைக் கேளாமல்  கன்னம் வைத்தாய் ...
          நெஞ்சில் கன்னம் வைத்தாய் ....ஹோ...
M :    நீ இல்லை என்றால் என் வாழ்வில் என்றும் 
          பகல் என்று  ஒன்றும் கிடையாது...
F :      அன்பே நம் வாழ்வில்  பிறிவென்பதில்லை ...
          ஆகாயம் ரெண்டாய் உடையாது ...
M :    இன்று காதல் பிறந்த நாள் 
          என் வாழ்வில் சிதைந்த நாள் ...
F :      மண மாலை  சூடும் நாள் பார்க்கவே ...
M :    ஒரு ஜீவன் அழைத்தது ..ஒரு ஜீவன் துடித்தது ..
          இனி எனக்காக அழ வேண்டாம் ..  
 
F      உன்னை நான்  கண்ட நேரம்  
        நெஞ்சில் மின்னல் உண்டானது...
M :  என்னை நீ கண்ட நேரம் ..
        எந்தன் நெஞ்சம் துண்டானது...
F :    காணாத அன்பை நான் இன்று  கண்டேன் 
         காயங்கள் எல்லாம் பூவாக...
M :   காமங்கள்  ஒன்றே என் காதல் அல்ல ...
         கண்டேனே  உன்னைத் தாயாக...
F :    மழை மேகம் பொழியுமா  நிழல் தந்து  விலகுமா 
M :  இனிமேலும் என்ன சந்தேகமா...

 
F :    ஒரு ஜீவன் அழைத்தது ..ஒரு ஜீவன் துடித்தது ..
M :  இனி எனக்காக அழ வேண்டாம் ..
        இங்கு கண்ணீரும் விழ வேண்டாம்..
F :    உன்னையே எண்ணியே வாழ்கிறேன்...
M :  லல லல  லலலா 
F :    லல லல  லலலா 
M :  லல லல  லலலா 
 F :   லலல லா...
   .
        


 
        

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.