பாடல் : எந்தன் கண்ணில்
படம் : குரு (1980)
இசை : இளையராஜா
கவிதை : கண்ணதாசன்
பாடியவர் : S ஜானகி
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை
என் நெஞ்சில் நாணம் இல்லை
பாப்பா ..... எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா
ரோஜா மலர்ந்தது துவண்டது
ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே
ரோஜா மலர்ந்தது துவண்டது
ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே
இங்கே இவள் சொர்க்கம் எது ?
இன்பம் தரும் சங்கம் எது ? - நீ
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை
என் நெஞ்சில் நாணம் இல்லை
வானம் விழுந்தது வளைந்தது
நமக்கென்ன பாவம் போகட்டுமே
வானம் விழுந்தது வளைந்தது
நமக்கென்ன பாவம் போகட்டுமே
சுகமே என்ன சுகமோ இது?
தல்லாடிடும் ராகமோ இது? - வா ஆ
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை
என் நெஞ்சில் நாணம் இல்லை
ப ப ப ப ப ப ப ப ........