பாடல் : அடி ஆத்தாடி ,
படம் : கடலோரக் கவிதைகள்,
இசை : இளையராஜா ,
பாடியவர்கள் : இளையராஜா, S ஜானகி
F அடி ஆத்தாடி .......
F அடி ஆத்தாடி
இள மனசொண்ணு ரெக்க கட்டி பறக்குது சரி தானா
அடி அம்மாடி ஒரு அல வந்து மனசுல அடிக்குது அது தானா ...
M உயிரோடு
F உறவோடும்
M ஒரு கோடி ஆனந்தம்
F இவன் மேகம் ஆக யாரோ காரணம்
M அடி ஆத்தாடி
இள மனசொண்ணு ரெக்க கட்டி பறக்குது சரி தானா
அடி அம்மாடி ஒரு அல வந்து மனசுல அடிக்குது அது தானா ...
F மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ
ஒன்னப் பார்த்து அலைகள் எல்லாம்மெட்டு கட்டி ஆடாதோ
M இப்படி நான் ஆனதில்ல புத்தி மாறிப் போனதில்ல
முன்ன பின்ன நேர்ந்ததில்ல மூக்கு நுனி வேர்த்ததில்ல
F கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்தி சண்டை கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ எச கேட்டாயோ ஓ. ...
M தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோஷம்
உண்மை சொல்லு பொண்ணே என்ன என்ன செய்ய உத்தேசம்
F வார்த்த ஒண்ணு வாய் வரைக்கும் வந்து வந்து போவதென்ன
கட்டு மரம் பூ பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன
M கட்டுத்தறி காள நானே கன்னுக்குட்டி ஆனேனே
தொட்டுத் தொட்டுத் தென்றல் பேச தூக்கம் கேட்டு போனேனே
ஒரு பொன் மானே ஏ ஏ எ ...
F அடி ஆத்தாடி
இள மனசொண்ணு ரெக்க கட்டி பறக்குது சரி தானா
அடி அம்மாடி ஒரு அல வந்து மனசுல அடிக்குது சரி தானா ...
M உயிரோடு
F உறவோடும்
M ஒரு கோடி ஆனந்தம்
F இவன் மேகம் ஆகா யாரோ காரணம்
M அடி ஆத்தாடி
இள மனசொண்ணு ரெக்க கட்டி பறக்குது சரிஅது தானா
அடி அம்மாடி ....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.