Wednesday, November 21, 2012

Boomikku Velichamellam Tamil Lyrics

பாடல் :  பூமிக்கு வெளிச்சமெல்லாம்,
படம் :    டிஷ்யூம்,
இசை :  விஜய் ஆன்டனி,
பாடியவர்கள்  :  காயத்ரி , ராகுல் நம்பியார்,
வருடம்  :  2006.

பெண் :  நான் சொல்வதெல்லாம் உண்மை 
                உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை 
               
               பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால் 
               பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால் 
               கடலுக்குள் நுரைகள் எல்லாம் நீ பல் துலக்குவதால் 
               காலையில் அடித்த மழை  நீ எனைத் தழுவியதால் 
குழு   :   லிங்க்கு இலக்கு லிங்கு லகக் லிங்கு லே லே லே..
                லிங்க்கு இலக்கு லிங்கு லகக் லிங்கு லே லே லே..

  ஆண் : பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால் 
               பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால் 
               கடலுக்குள் நுரைகள் எல்லாம் நீ பல் துலக்குவதால் 
               காலையில் அடித்த மழை  நீ எனைத் தழுவியதால்
ஆண் : நீ விழியால் விழியை பறித்தாய் 
               உன் உயிரினை எனக்குள்  விதைத்தாய் 
               உன் அழகால் எனை நீ அடித்தாய் 
               ஓர் அதிசய உலகத்தில் அடைத்தாய் 
பெண் : நீ இதமாய் இதயம் கடித்தாய் 
               என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய் 
               நீ மெதுவாய் எனையே குடித்தாய் 
               இந்த உலகத்தை உடைத்திடத் துடித்தாய் 
ஆண் :  காதல் வந்த பிறகு ஒட்டிக்கொள்ளும் சிறகு 
               வானம் ஒரு பூமி இனி தேவை இல்லை 
பெண் : ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால் 
               எட்டி நிற்கும் வானம் ஒன்றும் தூரம் இல்லை 
ஆண்:   பூமிக்கு..

ஆண் :  நீ மெதுவாய் நடந்தால் கடந்தால் 
               என் உணர்சிகள் தீப்பிடிதெறியும் 
              ஹேய்.. நீ துளியாய் எனக்குள் விழுந்தால் 
               என்னுயிர் பனிக்கட்டியாய் உறையும் 
பெண் : நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால் 
               என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவழும் 
               நீ நெருப்பை முறைத்தால் தகித்தால் 
               என் நெஞ்சுக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும் 
ஆண் : கண்களில் மின்மினி புன்னகை  சிம்பொனி 
               மின்னலின் தங்கை நீ புரிகிறதே 
பெண்: தொட்டவுடன் உருகும் ஒட்டிக்கொண்டு பழகும் 
               புத்தம் புது மிருகம் நீ தெரிகிறதே 
பெண்: கடலுக்குள் நுரைகள் எல்லாம் நீ பல் துலக்குவதால் 
              காலையில் அடித்த மழை  நீ எனைத் தழுவியதால் 
குழு   : லிங்க்கு இலக்கு லிங்கு லகக் லிங்கு லே லே லே..

               லிங்க்கு இலக்கு லிங்கு லகக் லிங்கு லே லே லே..

   

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.