Tuesday, October 16, 2012

Idhazhil Kadhai Ezhuthum Neramithu Tamil Lyrics, Movie : Unnal Mudiyum Thambi

     பாடல் :  இதழில் கதை எழுதும்,
     படம்  :  உன்னால் முடியும் தம்பி,
     இசை : இளையராஜா,
     பாடியவர்கள் : SPB , S  ஜானகி 
     வருடம் : 1988

M  : இதழில் கதை எழுதும் நேரமிது (2)
       இன்பங்கள் அழைக்குது ஆஆ

F  :  மனதில் சுகம் மலரும் மாலையிது
       மான்விழி மயங்குது ஆஆ
M  :  இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே (2)
        இருகரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது
M  :  இதழில் கதை எழுதும் நேரம் இது 

        இன்பங்கள் அழைக்குது ஆ ஆ அ அ
M  :   காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
         ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்

F   :  நானும் நீயும் சேர்ந்து ராகம்  பாடும்போது
        நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
M  :   இனிய பருவமுள்ள இளங்குயிலே (2)
        ஏன் இனும் தாமதம் மன்மதக் காவியம் என்னுடன் எழுத


F  :    நானும் எழுதிட இளமையும் துடிக்குது
         நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
M  :   ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
         ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி
F  :    காலம் வரும் வரை பொருத்திருந்தால்
         கன்னி இவள் மலர்க் கரம் தழுவிடுமே
M  :   காலம் என்றைக்குக் கனிந்திடுமோ
         காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
F  :     மாலை மலர் மாலை இடும் வேளை தனில்
          தேகம் இது விருந்துகள் படைத்திடும்

 

M  :   இதழில் கதை எழுதும் நேரமிது 
          இன்பங்கள் அழைக்குது ஆஆ

F  :     மனதில் சுகம் மலரும் மாலையிது
          மான்விழி மயங்குது ஆஆ


M  :   தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
          கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
F  :     பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
          மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
M  :   அழகைச் சுமந்து வரும் அழகரசி (2)
         ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ

F  :     நாளும் நிலவது தேயுது மறையுது
          நங்கை முகமென யாரதைச் சொன்னது
M  :    மங்கை உன் பதில் மனதினைக் கவருது
          மாறன் கணை வந்து மார்பினில் பாயுது
F  :     காமன் கணைகளைத் தடுத்திடவே
          காதல் மயில் துணை என வருகிறது
M  :   மையல் தந்திடும் வார்த்தைகளே
          மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
F  :     மோகம் நெருப்பாக அதைத் தீர்க்குமொரு
          ஜீவ நதி அருகினில் இருக்குது

M  :   இதழில் கதை எழுதும் நேரமிது (2)
          இன்பங்கள் அழைக்குது ஆஆ

F  :     மனதில் சுகம் மலரும் மாலையிது
          மான்விழி மயங்குது ஆஆ

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.