Monday, April 2, 2012

Saamikitta Solli Vachu Tamil Lyrics, Movie : Aavaram Poo




 பாடல்            :   சாமிகிட்ட சொல்லி வெச்சு,
 படம்              :   ஆவாரம் பூ,
 இசை             :   இளையராஜா, 
 பாடியவர்கள்  :   SP பாலசுப்ரமண்யம், S ஜானகி 
 வருடம்           :   1992

சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே 
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே (2)
முத்துமணியே பட்டுதுணியே 
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே
சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே 
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே


கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே
ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை
நாவார ருசித்தேனே தேனை தீர்ந்தேன் இன்று நானே
வந்தத துணையே வந்து அணையே
அந்த முல்ல சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே

சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே 
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே
முத்துமணியே பட்டுதுணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே


காவேரி அணை மேலேறி நதி ஓடோடி வரும் வேகம்
பூவான எனை நீ சேரும்விதி மாறாத இறை வேதம்
பூலோகம் இங்கு வானம் போலே மாறும் நிலை பார்த்தேன்
வாழ்நாளின் சுகம் தான் இது போல் வாழும் வழி கேட்டேன்
வண்ணக் கனவே வட்ட நிலவே
எண்ண எண்ண இன்பம் தரும் வண்ணம் கொண்ட கற்பனையே

சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே 
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே
முத்துமணியே பட்டுதுணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.