Tuesday, April 10, 2012

Malare Mounama Tamil Lyrics

மலரே மௌளனமா மௌளனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
மலரே மௌளனமா மௌளனமே வேதமா


பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே (2)
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா
மலரே மௌளனமா மௌளனமே வேதமா


கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே எனைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு (2)
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த வள்ளலே
மலரே மௌளனமா மௌளனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
மலரே மௌளனமா மௌளனமே வேதமா




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.